அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

தொண்ணூற்றாறாம் பாடல்

பொருள்

அன்னையான அபிராமவல்லியையும், இளமையும் அழகும் நிறைந்த கொடி போன்ற கோமளவல்லியையும், அழகிய மென்மையான தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட குற்றமற்ற யாமளவல்லியையும், ஓவியத்தால் கூட முழுமையாக வரைய முடியாத பேரழகு கொண்ட திருமேனியையுடைய சாமளவல்லியையும், அனைத்து கலைகளுக்கும் தலைவியாக விளங்கும் மயில் போன்ற அழகுடையவளையும் தங்களால் இயன்ற அளவு பக்தியுடன் வழிபடும் அடியவர்கள், ஏழு உலகங்களையும் ஆட்சி செய்யும் அரசர்களைப் போன்ற சிறப்பும் செல்வமும் நிறைந்த வளமான வாழ்க்கையைப் பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *