அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
நூறாம் பாடல்
குழையைத் தழுவிய ஒன்றை அம்தார் கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும், கரும்புவில்லும்
விழையப்பொருதிறல்வேரி அம்பாணமும்; வெண்ணகையும்,
உழையப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே.
பொருள்
சிவபெருமானை அன்புடன் இறுகத் தழுவியபோது, அவரது திருமார்பில் அணிந்திருந்த கொன்றை மலரின் மணம் அபிராமி அன்னையின் மார்பகத்திலும் பரவியது. கொடி போன்ற மென்மையான உடலையும், மூங்கிலைப் போன்ற நீண்ட அழகிய தோள்களையும் கொண்டவள் அவள். அவளது கையில் கரும்பு வில்லும், ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்பச் செய்யும் மணமிக்க ஐந்து மலர் அம்புகளும் உள்ளன. வெண்முத்தைப் போன்ற அழகிய புன்னகையும், மானின் விழிகளைப் போன்ற கருணை நிறைந்த கண்களும் உடைய அபிராமி அன்னையின் திருவுருவம், எளிய அடியேனுடைய நெஞ்சில் எப்போதும் குடிகொண்டிருக்கிறது.
