அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
தொண்ணூற்று ஏழாம் பாடல்
ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன்
போதிற் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி,
காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன் முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
பொருள்
சூரியன், சந்திரன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரம்மன், முப்புரங்களையும் எரித்த சிவபெருமான், முரன் என்னும் அசுரனை அழித்த திருமால், அகத்திய முனிவர், தாருகாசுரனுடன் போரிட்டு அவனை இரு கூறுகளாகப் பிரித்து வென்று அருளிய கந்தன், விநாயகர், மன்மதன் போன்ற பலரும், தங்கள் புண்ணியச் செயல்களாலும் சிறப்புகளாலும் புகழ்பெற்றவர்கள். இவ்வாறு எண்ணற்ற சிறப்புமிக்கவர்களும் அபிராமி அன்னையைப் போற்றி, பக்தியுடன் வழிபட்டு வருகின்றனர்.
