அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
எண்பதாம் பாடல்
கூட்டியவா! என்னைத் தன் அடியாரில் கொடியவினை
ஒட்டியவா! எண்கண் ஒடியவா! தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா! கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா!
ஆட்டியவா நடம் ஆடகத்தாமரை ஆரணங்கே.
பொருள்
பொற்றாமரையில் அமர்ந்து அருள்புரியும் அழகிய தேவியே!
எளியவனாகிய என்னையும் உன் அடியவர்களின் கூட்டத்தில் ஒருவனாக ஏற்றுக்கொண்டாய். என் கொடிய பாவ வினைகள் அனைத்தையும் நீக்கினாய். எனக்கு அருள் செய்வதற்காக விரைந்து வந்து, உன் பேரழகான திருக்கோலத்தை முழுமையாக எனக்குக் காட்டினாய். அந்த அழகிய திருக்கோலத்தைப் பார்த்ததும் என் கண்களும் மனமும் அளவற்ற ஆனந்தத்தில் திளைத்தன.
இவ்வாறு என்மீது இத்தனை அருளைப் பொழிந்து, இந்த அற்புதமான திருவருள் நாடகத்தை என்னிடம் நிகழ்த்தியதன் பின்னால் இருக்கும் ரகசியம் என்ன, தாயே?
