அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.

அறுபத்தேழாம் பாடல்

பொருள்

அபிராமவல்லியே! உன்னை மனமாரப் போற்றி, வாயாரப் பாடி வணங்கி, மின்னலைப் போல ஒளிவீசும் உன் திருமேனியின் அழகை ஒரு கண நேரமாவது என் மனதில் நிலைநிறுத்தி தியானிக்க வேண்டும். அவ்வாறு உன்னை நினைத்து வழிபடாதவர்களின் வாழ்க்கையில் ஈகை, நல்ல குடும்பப் பெருமை, உயர்ந்த குடிப்பிறப்பு, கல்வி, நற்குணங்கள் போன்றவை நாளடைவில் குறைந்து போகும். இறுதியில் அவர்கள் கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு, வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்து வாழும் நிலைக்கு ஆளாவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *