அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
அறுபத்தைந்தாம் பாடல்
ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!
பொருள்
அன்பான அபிராமவல்லித் தாயே! மேலுலகம், தேவலோகம், பூவுலகம் ஆகிய எல்லா உலகங்களும் அறியும் வகையில், ஒருகாலத்தில் மன்மதனைத் தனது தவவலிமையால் எரித்த சிவபெருமானுக்கே, ஆறு அழகிய முகங்களும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்ட ஞானக் குழந்தையாகிய முருகப் பெருமானைத் தோற்றுவிக்கும் சக்தியை நீ அருளினாய். உன்னுடைய வல்லமையும் பெருமையும் அளவிட முடியாதது!
