அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்தாறாம் பாடல்
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே
பொருள்
ஒரே பரம்பொருளாகிய பராசக்தியாக முதலில் தோன்றி, பின்னர் பலவிதமான சக்திகளாகப் பிரிந்து, இந்த உலகம் முழுவதும் நிறைந்து விளங்குபவளும், அதே நேரத்தில் அனைத்து பொருள்களுக்கும் அப்பாற்பட்டு தனித்து நிற்பவளுமாகிய அபிராமி அம்மாள், என் உள்ளத்தில் மட்டும் எப்போதும் நீங்காமல் நிலைத்திருப்பது எவ்வளவு பெரிய வியப்பு!
இந்தப் பேருண்மையை முழுமையாக அறிந்தவர்கள், பிரளய காலத்தில் ஆலிலை மேல் பள்ளிகொண்ட திருமாலும், என் தலைவனாகிய சிவபெருமானுமே ஆவர்.
