அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஆறாம் பாடல்
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.
பொருள்
சிந்தூரத்தின் செந்நிறத்தை ஒத்த திருமேனியைக் கொண்ட அபிராமி அன்னையே! பொன்னொளி வீசும் உன் திருவடிகள் என்னும் தாமரை மலர்கள் என் தலைமேல் என்றும் நிலைத்திருக்கட்டும். உன் அருள்மிகு திருமந்திரம் என் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. உன்னைப் பணிந்து வாழும் உன் அடியார்களுடன் இணைந்து, உன் மகிமையையும் பெருமையையும் எடுத்துரைக்கும் புனிதமான நூல்களை மீண்டும் மீண்டும் பக்தியுடன் பாராயணம் செய்து வருகிறேன்.
