அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
அறுபத்து மூன்றாம் பாடல்
தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே.
பொருள்
ஆறு சமயங்களுக்கும் தலைமைத் தெய்வமாக அபிராமி அம்மையே விளங்குகிறாள் என்பதை நன்கு அறிந்திருந்தும், அவளைத் தவிர வேறு தெய்வங்களும் உண்டு என்று கூறி வீணாகப் பேசுபவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்க முயல்வது, பெரிய மலைப்பாறையை ஒரு சிறிய மரக்குச்சியால் உடைக்க முயல்வதைப் போன்ற பயனற்ற செயலாகும்.
