அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
இருபத்தொன்பதாம் பாடல்
சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் ,வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே
பொருள்
அடைதற்கரிய எட்டு வகையான சித்திகளாகவும், அந்தச் சித்திகளை அருளும் பராசக்தியாகவும், தன்னுள் சக்தியை வளரச் செய்த பரமசிவனாகவும், தவம் செய்பவர்கள் அடையும் பேரானந்தமான மோட்சமாகவும், அந்த முத்தியைப் பெறுவதற்கான அடிப்படையான மூலமாகவும், அந்த மூலத்திலிருந்து தோன்றிய ஞானமாகவும் விளங்குபவள் திரிபுரசுந்தரி. இவ்வாறு அனைத்துமாக விளங்கும் அன்னை, என் அறிவிலும் உள்ளத்திலும் நிலைத்து நின்று என்னைக் காத்து அருள்பவளாக இருக்கிறாள்.
