அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.
பொருள்
ஆனந்தத்தின் வடிவமாகவும், என் அறிவாகவும், நிறைவான அமுதம் போன்றவளாகவும் விளங்கும் தேவியே! வானம் உள்ளிட்ட பஞ்சபூதங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்ட இறுதி நிலையாகத் திகழ்பவளின் திருவடித் தாமரை, நான்கு வேதங்களுக்கும் எட்டாத உயர்ந்த நிலையாக விளங்குகிறது. வெண்ணிறத் திருநீறு நிறைந்த மயானத்தைத் தனது ஆடல் அரங்கமாகக் கொண்ட சிவபெருமானின் திருமுடியில் அணியப்படும் அழகிய மாலையாகவும் அந்தத் திருவடிகள் திகழ்கின்றன.
