அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி என்பது அன்னை அபிராமியைப் போற்றி அபிராமி பட்டர் பாடிய 100 பாடல்களைக் கொண்ட பக்தி இலக்கியமாகும்.
ஐம்பத்திரண்டாம் பாடல்
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே.
பொருள்
பிறைச்சந்திரனைத் தன் தலையில் அணிந்த சிவபெருமானின் அழகிய துணைவியான அபிராமி அம்மையே! தேர், குதிரை, மதம் கொண்ட யானை, அழகிய மணிமகுடம், நவமணிகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு, பிற மன்னர்கள் செலுத்தும் பொன் பொருட்கள், விலைமதிப்புள்ள பொன்னாலான அணிகலன்கள் போன்ற செல்வங்கள் அனைத்தும், உன்னை நினைத்து தவம் செய்து வழிபடும் பக்தர்களுக்குக் கிடைக்கும் உயர்ந்த நன்மைகளாகும்.
