மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற துல்ஜாபூர் துல்ஜா பவானி அம்மன் கோயில், 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய சக்தி ஸ்தலமாக போற்றப்படுகிறது. போஸ்லே அரச குடும்பத்தின் குலதெய்வமாக விளங்கும் துல்ஜா பவானியை, சத்திரபதி சிவாஜி மகராஜ் ஆழ்ந்த பக்தியுடன் வழிபட்டதாகவும், அவரது வீரத்திற்கும் வெற்றிகளுக்கும் அடையாளமாக தேவி அவருக்கு ‘பவானி வாள்’ அருளியதாகவும் ஐதீகம் கூறுகிறது.

புராணக் கதைகளின்படி, எருமை வடிவில் மக்களைத் துன்புறுத்திய மீஷன் என்ற அரக்கனை வதம் செய்த பின்னர், தேவி யமுனாச்சல மலை (பாலகாட் பகுதி) மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினாள். கருவறையில் சுமார் மூன்று அடி உயரத்தில், எட்டு கரங்களுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும் துல்ஜா பவானி, பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்தி வடிவமாக வணங்கப்படுகிறாள்.

இந்த ஆலயத்தில் ராஜா ஹாஜி வாயில் மற்றும் ராஜமாதா ஜிஜாவு வாயில் என இரண்டு முக்கிய நுழைவாயில்கள் அமைந்துள்ளன. பிரதான நுழைவாயில் வழியாக படிக்கட்டுகளில் இறங்கி சென்றால்தான் கருவறையை அடைய முடியும் என்பது இந்தக் கோயிலின் தனிச்சிறப்பாகும்.

கருவறைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ளித் தட்டில் (பலாங்), இரவு நேரங்களில் துல்ஜா பவானி தேவி பள்ளிகொள்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். இந்த ஐதீக நம்பிக்கையும், கோயிலின் ஆன்மிக மகத்துவமும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை இத்தலத்திற்கு ஈர்த்துவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *